'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் நிபுணன் என்ற படத்தில் நடித்தபோது அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு பாலியல் புகார் கூறினார். இது பொய்யான குற்றச்சாட்டு, இதற்கு பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். ஸ்ருதி மீது வழக்கு தொடர்வேன் என்று அர்ஜுன் அறிவித்தார்.
இந்த நிலையில் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. வழக்கு தொடுத்தால் அதை சந்திப்பேன் என்று ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார். பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஸ்ருதி ஹரிஹரன் கூறியதாவது:
அர்ஜுன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது 100 சதவிகிதம் உண்மை. அப்போது தைரியமாக என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற பயம் இருந்தது. இப்போது பல பெண்கள் அமைப்பினர் எனக்கு பாதுகாப்பு தர முன் வந்துள்ளனர். அதனால் வெளிப்படையாக பேசுகிறேன். பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். யாரும் எனக்கு தொந்தரவு தரவில்லை. ஆனால் அர்ஜுனுடன் நடித்தபோது தான் எனக்கு மோசமான அனுபவங்கள் ஏற்பட்டது.
நான் விளம்பரத்திற்காக இதை செய்யவில்லை. அன்று நடந்த பாலியல் தொல்லைக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவர் என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திப்பேன். நானும் அவர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பேன். என்னிடம் உள்ள ஆதாரத்தை இப்போது வெளியிட மாட்டேன். வெளியிட்டால் அதை அழிக்க முயற்சிப்பார்கள். நேரம் வரும்போது வெளியிடுவேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்திடம் கொடுப்பேன். என்றார்.