சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான அர்ஜுன் மீது, கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் அளித்திருந்தார். இதை அர்ஜுன் மறுத்த நிலையில், இன்னொரு துணை நடிகையும் அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். கன்னட சேனல் ஒன்றுக்கு தன் முகத்தை மறைத்தபடி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
15 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களில் நானும், எனது கல்லூரி தோழிகளும் பாக்கெட் மணிக்காக ரிச் கேர்ளாக சினிமாவில் நடிப்போம். சுதீப், உபேந்திரா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறோம். அப்போதெல்லாம் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அர்ஜுன் நடித்த 'அர்ஜூனடு' என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பில் நானும், எனது தோழிகளும் 3 நாட்கள் கலந்து கொண்டு நடித்தோம்.
அப்போது நடிகர் அர்ஜூன், என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்ணை கேட்டார். நான் தர மறுத்து விட்டேன். அவர் ஒரு ரெசார்ட்டில் உள்ள அறை எண்ணை கொடுத்து, அங்கு வருமாறு என்னிடமும், எனது தோழிகளிடமும் கூறினார். நான் செல்லவில்லை. எனது தோழிகள், பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளுடன் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாங்கள் படப்பிடிப்புக்கு செல்வதை நிறுத்திவிட்டோம்.