ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மீடு என்பது பெண்களுக்கு அவசியமான ஒரு மூவ்மெண்ட். அதை தவறாக பயன்படுத்த கூடாது.. என நடிகர் தியாகராஜன் கூறி உள்ளார்.
தமிழ் சினிமாவில், மீ டூ விவகாரம், சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கவிஞர் வைரமுத்து, நடிகர் அர்ஜுனை தொடர்ந்து, நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தியாக ராஜன் மீது, பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் பாலியல் புகார் கூறி உள்ளார்.தியாகராஜனின் மகனும், நடிகருமான பிரசாந்த் நடித்த, பொன்னர் சங்கர் படத்தில், தனக்கு ஏற்பட்ட அத்துமீறல் குறித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதை மறுத்து தியாகராஜன் கூறியிருப்பதாவது : பிரித்திகா மேனன் எனும் ஒரு பெண், நான் இயக்கி தயாரித்த கலைஞரின் பொன்னர் சங்கர் படத்தில் மூன்று, நான்கு நாட்கள் அப்ரண்டீஸ் புகைப்பட கலைஞராக வேலை செய்த போது இரவில் யாரோ அவரது அறை கதவை தட்டியதாகவும், அது நானாக இருக்கலாம் என்ற யூகத்தில் அவரது பேஸ் புக் அக்கவுண்டில் தவறான ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். இதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
பிரித்திகா மேனன் தற்போது எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. என்மீது வீண் பழி சுமற்றி என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன். அதோடு இது போன்ற பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். விரைவில் ஊடகங்கள் முன்னிலையில் பல உண்மைகள் வெளிவரும்.. இவ்வாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார்.