பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார் என்கிற காரணத்திற்காக மலையாள நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கவேண்டும் என சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்தை கடுமையாக நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, நடிகர் சங்கத்திற்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் ராஜினமா செய்துவிட்டார் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேச தன்னை வந்து சந்திக்குமாறு திலீப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தன்னை வந்து சந்தித்தபோது திலீப்பிடம் ராஜினமா செய்யும்படி தான் வலியுறுத்தியதாகவும், திலீப்பும் எந்த மறுபேச்சும் இல்லாமல் ராஜினமா கடிதம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார் மோகன்லால்.
திலீப் அவராகவே ராஜினமா செய்ததாக நடிகர் சித்திக் கூறியிருந்தாரே என நிருபர்கள் மோகன்லாலிடம் கேள்வி எழுப்ப, “நான் என்ன செய்தேனோ அதைத்தான் நான் சொல்கிறேன். நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள்.. இல்லை உங்களுக்கு எது நம்பிக்கையாக தெரிகிறதோ அதையே நம்புங்கள்” என கோபமாக கூறினாராம் மோகன்லால்.