ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக வெற்றி பெற்ற பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், விஷ்ணு விஷால் நடிப்பில் ரவிக்குமார் இயக்கிய இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகியிருந்தது. விஷ்ணுவுடன் கருணாகரன், மியா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் சிவி குமார் தயாரித்தார்.
இந்நிலையில், இன்று நேற்று நாளை படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சி.வி.குமார், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்தபடத்தில் விஷ்ணுவும், கருணாகரனும் மீண்டும் நடிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.