இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜின் நடிப்பில் உருவாகும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார். முதல் முறையாக தமிழில் நடிக்கும் அவர், ரஜினியுடனான தன்னுடைய படபிடிப்பு அனுபவம் குறித்து, கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது : நடிகர் ரஜினி மிக மிக ஆச்சரியத்துக்குரிய மனிதர். அவருடன் நடிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள், இப்போது நானும் ஒருவனாகி விட்டேன். வட இந்தியாவின் சின்னஞ்சிறு கிராமங்களில் கூட ரஜினி பற்றி மக்கள் அறிந்திருக்கின்றனர். அந்த வகையில், நாட்டிலேயே சூப்பர் ஸ்டார் நடிகர் என்றால், ரஜினிதான். அவருக்கான ரசிகர்கள் உலகம் முழுவது இருக்கின்றனர். ஆனால், அதுபற்றியெல்லாம் அவர் கொஞ்சமும் கண்டு கொள்வதே இல்லை.
தன்னுடைய நடத்தையில் துளி கூட பந்தா இல்லாமல் எளிமையாக இருக்கிறார். அவரை முதன் முதலில் பார்த்தபோது, நீண்ட காலம் பழகியவர் போல என்னிடம் பேசினார். அதில் செயற்கை இல்லை; யதார்த்தம்தான் இருந்தது. ரஜினிக்கு வட இந்தியாவிலும் இருக்கும் மவுசு; மரியாதைப் போல, தென் இந்தியாவில், வட இந்திய நடிகர்களுக்கு இல்லை. ஆனாலும், வட இந்திய நடிகர்கள், பந்தாவுடன் சுற்றுகிறார்கள்; வேடிக்கையாக இருக்கிறது.