பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் முதலானோர் நடிக்கும் '2.0' படம் நவம்பர் 29 அன்று வெளியாக இருக்கிறது.
'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்தை ரூ.500 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 'லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரித்து வருகிறது.
நவீன '3D' தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கிராபிஸ் மற்றும் VFX போன்ற டெக்னிகல் வேலைகள் அதிகம் இருப்பதால் அந்த வேலைகள் முடிவுற காலதாமதம் ஏற்பட்டதால் ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவித்தும் அந்த தேதிகளில் படத்தை வெளியிட முடியவில்லை.
இதனை தொடர்ந்து நடந்து வந்த இப்படத்தின் அனைத்து VFX வேலைகளும் விரைவில் முடிந்து விடும் என்றும், வருகிற நவம்பர் 29-ஆம் தேதி '2,0' திரைப்படம் ரிலீஸ் உறுதி என்றும் இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவிட்டிருந்தார்.
தீபாவளி முடிந்து 3 வது வாரத்தில் அதாவது நவம்பர் 29-ஆம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. தற்போது '2.0' படத்தின் பிசினஸ் தொடங்கப்பட்டுள்ளது. 1 ஏரியாவை வாங்க 10 பேர் போட்டியிடுகிறார்கள். அதனால் விலையை ஏலம் போட்டு ஏற்றி வருகின்றனர்.