பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோரின் திருமணம் அடுத்த மாதம் நவம்பர் 10ம் தேதி இத்தாலி நாட்டில் உள்ள லேக் கோமோ என்ற இடத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்து முறைப்படி நடக்க உள்ள திருமண சடங்குகள் மட்டும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாம்.
திருமணத்திற்கு இருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள். அவர்கள் யாரையும் செல்போனைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள உள்ளார்களாம்.
லேக் கோமோ ஒரு அழகான இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. அங்கு மிகப் பிரம்மாண்டமான வில்லாக்கள் உள்ளன. அவற்றில்தான் தனிப்பட்ட விதத்தில், மிகவும் பாதுகாப்புடன் ரன்வீர், தீபிகா திருமணம் நடைபெற உள்ளது என்கிறார்கள்.
ஏற்கெனவே, ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோரது திருமணம் இத்தாலியில் உள்ள போர்கோ பினோச்சிட்டோ என்ற இடத்தில் நடைபெற்றது.
ஹிந்தி பிரபலங்கள் தற்போது அவர்களது திருமணங்களை வெளிநாடுகளில் நடத்துவதுதான் பேஷனாகிவிட்டது.