இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இன்று நேற்று நாளை படத்தில் டைம் மிஷினை கண்டுபிடிக்கும் டி.எம்.கார்த்திக் என்ற அந்த காமெடி நடிகரை யாரும் மறந்திருக்க முடியாது. அவ்வப்போது சினிமாவில் நடிப்பார். என்னெற்றும் புன்னகை, ராஜாரணி, 10 எண்றதுக்குள்ள, தெறி, செக்கச் சிவந்த வானம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் மீது பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து டுவீட் செய்திருந்தனர். அதனை பாடகி சின்மயி ரி-டுவீட் செய்திருந்தார். தற்போது இந்த புகார்களுக்கு பதில் அளித்துள்ள கார்த்திக், இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
நான் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக மீ டூ வில் புகார்கள் வந்துள்ளன. பெண்களிடம் நான் மரியாதையாகவே நடந்து இருக்கிறேன். எந்த பெண்ணுக்கும் தொல்லை கொடுக்க நினைத்தது இல்லை. எனது சந்திப்பை அசவுகரியமாக கருதும் பெண்களை விட்டு நான் விலகி விடுவது உண்டு. என்னால் எந்த பெண்ணுக்காவது சங்கடம் நேர்ந்து இருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீ டூ இயக்கம் என்னை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவி இருக்கிறது. எனது தவறுகளுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்.
இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.