ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பவர்பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி வரும் மல்டி ஹீரோ படம் 15-ம் நூற்றாண்டு கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நாகார்ஜூனாவும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதுப்பற்றி விசாரித்தபோது, தனுஷ் இயக்கி வரும் இந்த புதிய படத்திற்கு, நான் ருத்ரன் என்று அவர் பெயர் வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த படம் சமகாலத்து கதையில் தான் உருவாகிறதாம். என்றாலும் இடையிடையே 15-ஆம் நூற்றாண்டு கதையும் கலந்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி வரும் பிளாஷ்பேக் கதையில் தான் நாகார்ஜூனா நடிக்கிறாராம்.