ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபாவளிக்கு திரைக்கு வரும் சர்கார் படம் குறித்த தகவல்களை பேட்டிகளில் தெரிவித்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, இந்த படத்தில் விஜய்யின் கேரக்டரை கூகுள் சி.ஈ.ஓ சுந்தர் பிச்சையின் பாதிப்பை வைத்து தான் உருவாக்கினேன். அதனால் விஜய் கேரக்டருக்கு சுந்தர் என்று பெயர் வைத்துள்ளேன்.
முதல் பாதியில் விஜய்யின் கேரக்டர் கொஞ்சம் வில்லத்தனமாகவும் இருக்கும். அதனால் இந்த படத்தின் கதையை முதலில் உருவாக்கியபோது வில்லாதி வில்லன் என்று தான் தலைப்பு வைத்திருந்தேன். படப்பிடிப்பு நடந்தபோது தான் வில்லாதி வில்லனை விட சர்கார் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தலைப்பை மாற்றினேன் என்கிறார் முருகதாஸ்.