'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
உலகளவில் பிரபலமான மீ டூ விவகாரம், இந்தியாவையும் ஆட்டி படைக்கிறது. பெண்கள் பாலியல் ரீதியாக தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அமைந்த இந்த மீ டூ-வால் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் சிக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் வைரமுத்து மீது சின்மயியும், சுசி கணேசன் மீது லீனா மணிமேகலையும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நடிகர்கள் ஜான் விஜய், ராதாரவி, நடன அமைப்பாளர் கல்யாண் ஆகியோரும் இதில் சிக்கினர்.
இந்நிலையில் நடிகர் அமித் பார்கவின் மனைவியும் தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி, நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் தொல்லை புகார் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : இந்த சம்பவம் 2014-ல் நடந்தது. இதை தைரியமாக பேச வைத்த எனது கணவர் அமித் மற்றும் சின்மயிக்கு நன்றி. ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். ஒருமுறை நான் அவரை பேட்டி எடுத்தேன். ஒரு மாதத்திற்கு பிறகு நள்ளிரவில் எனக்கு போன் செய்து அந்த பேட்டி குறித்த விவரம் கேட்டார். நான் தூக்கத்தில் உள்ளேன், காலையில் பேசுகிறேன் என்றேன். தொடர்ந்து அவர் போனில் ஆபாசமாக பேசினார். உங்கள் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியதும் போனை கட் செய்துவிட்டார் என பதிவிட்டிருக்கிறார்.
மேலும், கடம் வித்வான் உமா சங்கர், அலுவலகம் ஒன்றில் தான் பணியாற்றியபோது, தனது இடுப்பை கிள்ளினார் என மற்றொரு பதிவில் கூறியிருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
ஜான் விஜய் மனைவி மன்னிப்பு
இதனிடையே மற்றொரு டுவிட்டர் பதிவில், நடிகர் ஜான் விஜய்யின் மனைவி, நடந்த விஷயங்களை கேட்டறிந்ததாகவும், தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். அவர் தானாக முன் வந்து மன்னிப்பு கோரியதை உண்மையாக பாராட்டுகிறேன் என கூறியுள்ளார் ஸ்ரீரஞ்சனி.