'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல குணசித்ர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். இவர் சென்னை அய்யப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டி வருகிறார்.
இது தொடர்பாக அவர் சங்க கூட்டத்திலும் பேசியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனக்கு டெலிபோனில் மிரட்டலும், ஆபாச பேச்சு தொல்லையும் வருவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் அம்பத்தூர் போலீஸ் இணை கமிஷனரிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் 2013-ம் ஆண்டு துவக்கப்பபட்டுள்ளது. ஆனால் அந்த குடியிருப்பு வளாகம் 2015ம் ஆண்டு தான் திறக்கப்பட்டது. சட்டவிரோதமாக அமைந்த இந்த சங்கத்தில் பல முறைகேடுகள் நடந்து வருகிறது. அதற்கு எதிராக நான் குரல் கொடுத்து வருகிறேன். அதனால் எனக்கு கடந்த 6 மாதமாக தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் வருகிறது. நான் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து ஆபாசமாக பேசுகிறார்கள். அதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன். என்றார்.