'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியா முழுவதும் 'மீ டூ' விவகாரம் பெரும் அளவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. திரையுலகத்தில் தான் பலரும் அவர்களது பாலியல் தொந்தரவுகளைப் பற்றி அதிகமாகப் பேசி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல நடிகைகள் அவர்களுக்கு நடந்த விஷயங்களைப் பற்றி பரபரப்பாகப் பேசி வருகிறார்கள்.
இந்த மீ டூ விவகாரம் குறித்து பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்கள் வாயைத் திறக்காமல் அமைதி காப்பது ஏன் என நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஷபனா ஆஸ்மி, கரன் ஜோஹர் போன்றவர்கள் எங்கே போனார்கள். அவர்களும் இது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். 'ஜிம் தோற்றம், ஏர்போர்ட் தோற்றம்' என பத்து முறை டுவீட் போடுவார் கரண். ஆனால், இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இது அவர்களுக்கு 'பிரட் அன்ட் பட்டர்' மாதிரி. திரையுலகம் ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்கி நகரும் போது அவர்கள் எங்கே?. பெரிய நட்சத்திரங்கள் ஏன் அவர்களின் விவரங்களை இதுவரை ஷேர் செய்யவில்லை. நான் மட்டுமே அது பற்றி பேசியிருக்கிறேன். ஆனால் அது மட்டும் போதாது,” என்று கங்கனா கூறுகிறார்.