டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'வடசென்னை' நாளை புதன்கிழமையே (அக்டோபர் 17) ரிலீஸாக இருக்கிறது. மூன்று பாகங்களாக உருவாகும் 'வடசென்னை' படத்தின் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
அடுத்தடுத்த பாகங்கள் தொடர்ந்து உருவாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், வடசென்னை- 2 படத்திற்கு முன்பு வேறொரு படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைகிறது. அடுத்த வாரம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம், பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலைத் தழுவி உருவாகிறது. கருவேலம்பூக்கள் என்ற அற்புதமான படத்தை இயக்கியவர் பூமணி. இவர் எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
வெற்றிமாறன் திரைப்படமாக எடுக்கவிருக்கும் வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.