இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த ஆண்டு மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் முன்னணி நடிகரான திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கைதாகி, சிறை சென்று, தற்போது ஜாமினில் வெளிவந்து படத்தில் நடித்து வருகிறார். அந்த சமயத்தில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப், நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றபின், அவரை மீண்டும் சங்கத்தில் சேர்ப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவிற்கு நடிகைகளின் தரப்பிலிருந்து மிக பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சில நடிகைகள் இந்த முடிவை எதிர்த்து சங்கத்தில் இருந்து விலகியிருக்கிறார்கள். பார்வதி, ரேவதி போன்றோர் இந்த முடிவை மாற்றும்படி நடிகர் சங்கத்துடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், திலீப் தன்னால் சர்ச்சை ஏற்படுவதை விரும்பாத திலீப் மோகன்லாலுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்து விட்டாராம். வரும் நவ-24ஆம் தேதி கூடவுள்ள பொதுக்குழுவில் இந்த கடிதத்தின் மீதான முடிவு எடுக்கப்படும் என சங்க உறுப்பினரும் மூத்த நடிகருமான சித்திக் கூறியுள்ளார்.