பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கமலின் விஸ்வரூபம் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா குமார். ஆனால் உத்தம வில்லன், விஸ்வரூபம்-2 என கமலின் படங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வேறு எந்த படமும் கைவசம் இல்லாத நிலையில் மலையாளத்தில் மோகன்லால் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளாராம் பூஜா குமார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில், ஏற்கனவே மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சாலி மரைக்கார்' என்கிற கடற்படை தலைவன் பற்றிய கதை இது. இதில் தான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூஜா குமார்.
அதுமட்டுமல்ல, இந்தியில் நான்கு குறும்படங்களை இணைந்து ஆந்தாலாஜி படமாக உருவாகும் 'தி இன்விசிபில் மாஸ்க்' என்கிற படத்தில் ஒரு குறும்படத்தை பிரியதர்ஷன் இயக்க, அதில் நாயகியாக பூஜா குமார் தான் நடித்துள்ளாராம்.