டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மோகன்லால் நடிப்பில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத கதையை படமாக்க இருப்பதாக கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மலையாள இயக்குனரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய 'ரண்டமூழம்' என்கிற நாவலை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக இருக்கிறது. இதை தற்போது 'ஒடியன்' படத்தை இயக்கிவரும் ஸ்ரீகுமார் மேனன் தான் இயக்கவுள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப்படத்திற்காக தான் போட்டிருந்த ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதாகவும், குறிப்பிட்ட காலத்தில் இந்த கதையை படமாக்க தவறியதால் படத்தின் ரைட்ஸை தன்னிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என எம்.டி. வாசுதேவன் நாயர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பிரச்சனையை எம்.டி. வாசுதேவன் நாயருடன் கலந்துபேசி சரி செய்து வருவதாக இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் கூறியிருந்தார்.
இந்தநிலையில் துபாயில் இருக்கும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி, “கேரளாவில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் மகாபாரதம் கதையை நான் தயாரிப்பது பணத்திற்காக அல்ல. அதை உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான். நிச்சயம் அந்தப்படம் தயாராகும். அது ரண்டமூழம் நாவலா இல்லை வேறு ஒன்றா என்பது பற்றி எனக்கு கவலையில்லை” என கூறியுள்ளார்..