இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நிதி சிக்கலில் இருக்கும் தென்னிந்திய படத் தொகுப்பாளர் (எடிட்டர்) சங்கத்துக்கு இளையராஜா உதவுகிறார். இதுகுறித்து அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 1991ம் ஆண்டு தென்னிந்திய படத் தொகுப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் படத் தொகுப்பாளர்கள் சங்கத்துக்கு சொந்தமாக இடம் வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் இளையராஜாவை அணுகியபோது, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி சங்கத்திற்கு இடம் வாங்கிக் கொடுத்தார் இளையராஜா. அதை இன்று வரை நாங்கள் மறக்கவில்லை.
இன்றைய தொழில்நுட்ப தாக்கத்தால் படத் தொகுப்பாளர்கள் சங்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் இளையராஜாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர் மிகுந்த தாயுள்ளத்தோட எங்கள் சங்கத்திற்கு பொருள் உதவி செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்காக எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உதவிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.