'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள பெண்கள் சினிமா சங்கம் சார்பில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடிகை ரேவதி, பத்மப்ரியா, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய ரேவதி "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 17 வயதே ஆன இளம் நடிகை என் வீட்டு கதவை தட்டினார். அக்கா என்னை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதார்" என்று கூறினார்.
அந்த 17 வயது நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்பது ரேவதிக்கு தெரியும். அவர் ஏன் அதை மறைத்தார் என்று கொச்சியை சேர்ந்த சியாஸ் ஜமால் என்பவர் எர்ணாகுளம் மத்திய போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் போலீசிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சில வருடங்களுக்கு முன்பு 17 வயது நடிகையை யாரோ பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அந்த நடிகை ரேவதியிடம் அடைக்கலம் கேட்டிருக்கிறார். அந்த நடிகை நிச்சயம் அந்த குற்றவாளி பற்றி ரேவதியிடம் கூறியிருப்பார். ஆனால் அதை அவர் மறைத்து விட்டார். எனவே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து ரேவதி கூறும்போது "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது நடிகை என் வீட்டு கதவை தட்டி காப்பாற்றச் சொன்னது உண்மைதான். ஆனால் அந்த பெண்ணுக்கு பலாத்கார முயற்சி நடந்ததாக நான் கூறவில்லை. அந்த பெண்ணின் வீட்டு கதவை யாரோ தட்டியதால் பயந்து என் வீட்டுக்கு அவர் பாட்டியுடன் வந்தார். அன்று இரவு முழுவதும் நாங்கள் மூவரும் தூங்காமல் இருந்தோம். பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்பதை வற்புறுத்தவே அந்த சம்பவத்தை சொன்னேன்" என்கிறார்.