ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'சர்க்கார்' படம் ரிலீஸ் ஆன பின், தீவிர அரசியலில் இறங்க நடிகர் விஜய் முடிவெடுத்து இருப்பதாக, அவரது ரசிகர்கள் மன்றத்தினர் பரபரப்பான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். இது குறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:
நடிகர் விஜய்க்கு, தீவிரமான அரசியல் ஆசை உண்டு. அதனால் தான், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தொடர்ந்து தன்னுடைய படங்களில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை அமைத்து வருவதோடு, அரசியல் பஞ்ச் டயலாக்குகளை வலிந்து திணித்து வருகிறார்.
கடந்த 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், தனியாக மேடை போட்டு, தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் செய்ததில் இருந்தே, அவர் தன்னுடைய அரசியலைத் துவக்கி விட்டார். ஆனால், அந்தத் தேர்தலில், அவர் நினைத்தது போல தி.மு.க., தோற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், முதல்வர் ஜெயலலிதா, தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் தீவிர அரசியலில் ஈடுபட வைப்பார் என நம்பினார் விஜய். ஆனால், அது நடக்காமல் போனதோடு, நடிகர் விஜய்க்கு எதிரான தீவிர மன நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டதோடு, விஜய், தன்னுடைய பிறந்த நாள் விழாவைக் கூட சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
அவர் நடித்து வெளியான படங்களுக்கும், பல்வேறுவிதமான இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், தன்னுடைய அரசியல் நுழைவை கொஞ்ச காலத்துக்கு தள்ளிப் போட்டு விட்டு, விஜய் அமைதியானார். தற்போது ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில், தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, தன்னால் முடியும் என விஜய் நம்புகிறார். அவரது அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் வெகுவாக நம்புகிறார்.
விரைவில், விஜய் நடித்து 'சர்க்கார்' படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தில் ஏகப்பட்ட அரசியல் நிகழ்வுகள், படமாக்கப்பட்டு இருக்கின்றன. அந்தப் படம் வெளியான கையோடு, நடிகர் விஜய், தீவிர அரசியலில் களம் இறங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் தான், தாமிரபரணி புஷ்கர விழாவுக்குச் சென்ற விஜய்யின் அப்பா சந்திரசேகரன், நடிகர் விஜய் ஏன் அரசியலில் ஈடுபடக்கூடாது என கேள்வி எழுப்பியதோடு, மக்களால் உயர்த்தப்பட்டவர், மக்களுக்கு பாடுபடக் கூடாதா என்றும் கேட்டு இருக்கிறார்.
இந்து மதத்தின் புனித நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்ததோடு, தன்னை இந்துவாகக் காட்டுவதன் மூலம், எதிர்கால அரசியல் திட்டங்களுக்கு உதவும் என திட்டமிட்டுத்தான், புஷ்கர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.