சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
பாலியல் குற்றச்சாட்டுகளால் பாலிவுட் சினிமா கலகலத்து கிடக்கிறது. தினசரி ஒரு பிரபலத்தின் மீது பாலியல் புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதனாலேயே தான் நடிக்கவுள்ள 'ஹவுஸ்புல்-4' படத்தின் படப்பிடிப்பை நிறுத்தசொல்லி தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார் அக்சய் குமார்.
காரணம் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நானா படேகரின் மீது ஏற்கனவே நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தற்போது படத்தின் இயக்குனர் சாஜித்கான் மீதும் நடிகைகள் சலோனி சோப்ரா, ரேச்சல் ஒயிட் உள்ளிட்ட சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம்தான் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அக்சய் குமார், இதனால் டென்சனாகி 'ஹவுஸ்புல்-4' படப்பிடிப்பை தற்போது துவங்கவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை தெளிவானபின் படப்பிடிப்பை துவங்கலாம் என்றும் பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளானவர்களுடன் நான் நடிக்கமாட்டேன் என்றும் கூறி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நானா படேகரும், சாஜித் கானும் இந்தப்படத்திலிருந்து விலகியுள்ளார்களாம்.