அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மறைந்த பிரபல மலையாள நடிகர் திலகன், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடும் குணமுள்ளவர். மலையாளத்தில் சீனியர் நடிகையான கே.பி.ஏ.சி லலிதாவும் திலகனும் சுமார் இருபது வருடங்களுக்குமுன் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.
லலிதாவின் கணவர் இயக்குனர் பரதன் (தேவர்மகன் படத்தை இயக்கியவர்) தனது படங்களில் ஜாதியை தூக்கிப்பிடிகிறார் என அடிக்கடி லலிதாவிடம் கோபமாக வாதம் செய்வாராம் திலகன். இதனால் எரிச்சலான லலிதா இனி உங்களுடன் பேசமாட்டேன் என சொல்ல, திலகனும் பதிலுக்கு ஒரு தீக்குச்சியை இரண்டாக முறித்து நானும் உன்னுடன் பேசப்போவதில்லை என கூறிவிட்டாராம்.
இப்படி பேசிக்கொள்ளாமல் இருந்த காலகட்டத்தில் தான், இருவரும் ஸ்படிகம் படத்தில் மோகன்லாலின் பெற்றோராக கணவன் மனைவியாகவும் நடித்தனராம். அதன்பின் காதலுக்கு மரியாதையின் மலையாள ஒரிஜினலான 'அனியத்தி பிறா' படத்தில் இவர்கள் நடித்தபோது, உடன் நடித்த ஸ்ரீவித்யா, இவர்களின் சண்டையை அறிந்து, இருவருக்குள்ளும் சமரசம் செய்து வைத்து, மீண்டும் இருவரையும் பேசவைத்தாராம்.