விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
'மீ டூ' விவகாரம் தமிழ்த் திரையுலகத்தை பலமாக உலுக்கிக் கொண்டிருக்கிறது. வைரமுத்து மீது சின்மயி தொடர்ந்து அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக திரையுலகத்தில் ஒரு சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது வெளியில் வர வேண்டும் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.
இதனிடையே, நடிகர் சித்தார்த் இந்த 'மீ டூ' குறித்து அவருடைய கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “கடலில் மீன் ஒன்று அழுதா, கரைக்கு செய்தி வந்து சேருமோ..?, மீ டூவுக்காக மேலும் ஒரு நாள் அமைதி. தமிழ் சினிமாவுக்கான நேரம் வந்துவிட்டது. மேலும், சில பெயர்கள் வெளிவரலாம், பார்ப்போம். இங்குள்ள முறைகள் மாற வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். பாதுகாப்பான வேலை செய்யும் இடமாக உருவாக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
சித்தார்த் எதிர்பார்ப்பது போல் மேலும் சில பெயர்கள் இந்த விவகாரத்தில் வெளிவருமா?, அல்லது அடங்கிப் போய்விடுமா ?.