தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி மற்றும் பலர் நடிக்கம் படம் 'சர்க்கார்'. ஒரு அரசியல் படமாக உருவாகி வரும் இந்தப் படம் நவம்பர் 6ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இப்படத்தின் வினியோக உரிமையை 'மெர்சல்' படத்தைத் தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்கள் ஏரியாவாரியாக படத்தைப் பிரித்து விற்று வருகிறார்கள். 'மெர்சல்' படத்தின் வியாபாரம் என்ன, வசூல் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் படத்தை அவர்களிடம் கொடுத்துள்ளது படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ்.
எதிர்பார்த்தது போலவே, 'மெர்சல்' படம் விற்கப்பட்ட விலைக்கும் அதிகமாக 'சர்க்கார்' படத்தின் வியாபாரம் நடைபெற்று வருகிறதாம். மிகப் பெரும் கூட்டணி என்பதால் படத்தின் வியாபாரம் எந்த சிக்கலும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. 'மெர்சல்' படத்தில் ஓரிரு அரசியல் வசனங்கள் இருந்ததற்கே சர்ச்சை எழுந்தது. 'சர்கார்' படமே அரசியல் படம் என்பதால் வெளியீட்டு சமயத்தில் ஏதாவது நடக்குமா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.