இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
குறுகிய காலத்தில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, சண்டக்கோழி 2-ம் பாகம், சர்கார் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறு எந்தப் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடித்து வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறதாம். அதனால் 2 மாதங்கள் பிரேக் எடுத்துக் கொள்ளப்போகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
3 ஆண்டுகளில் இத்தனை படங்கள் நடித்திருக்கிறோமா என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். எதிலும் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருப்பேன். தோட்ட வேலை செய்வேன். கவிதை எழுதுவேன், சமையல் செய்வேன். வயலின் கத்துக் கொண்டிருந்தேன், அதை தொடர்வேன். இந்த ஓய்வுக்கு பிறகு தான் நடிப்பேன் என்றார்.