அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக என்னை அணுகினார், மிரட்டினார் என பாடகி சின்மயி கூறிய சம்பவம் திரையுலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அதோடு காலையில் இதுதொடர்பாக நீண்டதொரு விளக்கத்தையும் பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சின்மயி கூறியதாவது : பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது குற்றம் சுமத்தவில்லை. அந்த சம்பவம் நடந்தது உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரத்திற்கு இப்போது ஆதாரம் கேட்பது முறையற்றது. அதற்கான ஆதாரங்கள் இல்லை.