'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சினிமா பிரபலங்களின் பெயர்களில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் ஏராளமான கணக்குகள் உள்ளன. ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
போலி பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான தகவல்களை வெளியிட்டு அதனால் சிக்கல் வரும்போது, அய்யோ அது நான் அல்ல, என் பெயரில் யாரோ செய்த வேலை என்று கூக்குரலிடுவார்கள். போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுப்பார்கள்.
சினிமா நட்சத்திரங்கள் பெயர்களில் போலி கணக்குகளை ஆரம்பித்து மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது அடுத்தக்கட்டத்துக்கும் சென்றுவிட்டனர். அதாவது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரிய வந்ததும் விஜய் தரப்பிலிருந்து எச்சரிகை அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
“சமீப காலத்தில் விஜய்யின் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும், அதில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாகவும் கூறி வருகின்றனர். மேலும் அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக புகைப்படங்களாக பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.
விஜயின் மகன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை. தயவு செய்து, யாரும் இந்த போலி கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.