டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த 2004-ல் மலையாள திரையுலகில் தனது நடிப்பு பயணத்தை துவங்கிய பூர்ணா, 2008ல் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் அறிமுகமானார். இப்போதுவரை கதையின் நாயகியாக அல்லது வில்லியாக என முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இவருக்குப்பின் சினிமாவுக்குள் வந்த பல நடிகைகள் திருமணம் குடும்ப வாழ்க்கை என செட்டிலாகிவிட்டனர். ஆனால் பூர்ணா தனது திருமண விஷயம் குறித்து இதுவரை பேசியதில்லை. சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றில், தனது திருமணம் தாமதமாக தடையாக இருப்பது எது என்கிற விபரம் குறித்து கூறியுள்ளார் பூர்ணா.
“என் அம்மா எனது திருமண பேச்சை எடுக்காத நாளில்லை. ஆனால் திருமணத்திற்கு எனது ஜாதி மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதையும் மீறி சம்பந்தம் பேச வருபவர்களும், திருமணத்திற்குப்பின் நான் நடிப்பு, நடனம் ஆகியவற்றை விட்டுவிட வேண்டும் என்கின்றனர். காதல் திருமணம் என்றால் கூட அங்கேயும் இதுபோல எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். இதனாலேயே எனது திருமணம் தள்ளிபோகிறது” என்றார்.
அதேசமயம் ஜாதியை பெரிதாக நினைக்காமல் நிபந்தனை இல்லாமல் வரும் வரனை திருமணம் செய்துகொள்வதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார் பூர்ணா. இவரது நிஜப்பெயர் ஷாம்னா காசிம் என்பதும் இவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.