தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காதல் தேசம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனவர் கே.வி.ஆனந்த். பின்னர் 2005ம் ஆண்டில் ஸ்ரீகாந்தை நாயகனாக வைத்து கனா கண்டேன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் ஆனார். 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 2009-ல் அயன் படத்தை இயக்கி வெற்றி இயக்குனர் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் அவர் இயக்கிய கோ படம் ஆஹா ஓஹோ என பாராட்டு பெற்றதுடன், கே.வி.ஆனந்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஆக்கியது.
தற்போது மாற்றான் படத்தை இயக்கி வரும் ஆனந்த், அந்த படத்திற்கு பிறகு இயக்கப்போகும் படம் என்ன? என்று ரசிகர்கள் இப்போதே பேசி வரும் நிலையில், முதன்முறையாக இந்திப் படம் இயக்க உள்ளார். இப்படத்தில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்டவை முடிவடைந்த நிலையில், விரைவில் சூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.