'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தமிழ் சினிமாவில் 'தலைவன்' படம் மூலம் அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன்பின், “என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கேரளாவைச் சேர்ந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீசாந்த் தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார். நிகழ்ச்சியில் அவருடைய மனைவி புவனேஸ்வரியுடன் 7 வருடங்கள் இருந்த காதலைப் பற்றி அவர் விவரித்துள்ளார். அதைப் பார்த்ததும்தான் நிகிஷா, ஸ்ரீசாந்த் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
“ஸ்ரீசாந்தை விட்டுப் பிரிந்தபின் நான் அவரை சந்திக்கவேயில்லை. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன். புவனேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஏழு வருடங்களாக காதலில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். அதுதான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் காதலில் இருந்த போது என்னுடன் எப்படி ஒரு வருடம் 'லிவ்-இன்' வாழ்க்கை வாழ்ந்தார்.
அவரைப் பிரிந்த பிறகு ஐந்து வருடங்களாக அமைதியாக சென்றுவிட்டேன். ஆனாலும், அந்தப் பிரிவிலிருநது இன்னும் முழுமையாக விடுபட முடியவில்லை. பல கேள்விகளுக்கு விடையில்லாமல் இருக்கிறது.
2012ம் ஆண்டு அவரை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவருடைய மனைவியுடன் அந்த அளவிற்கு காதலில் இருந்தவர் என்னுடன் எப்படி வாழ்ந்தார் என்பதை நினைத்தால் எனக்கு வேதனையாக உள்ளது.
ஸ்ரீசாந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை மிக நல்லவராக, ஒரு மகான் ஆக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால், அவருடைய மறுபக்கம் என்ன என்பது எனக்குத் தெரியும். அவர் ஒன்றும் மகான் அல்ல. அந்த நிகழ்ச்சியில் அவர்தான் மிகச் சிறந்தவர் என்பது போல வெளிக்காட்டிக் கொள்கிறார். அவருக்கு பெண்கள் மீது எப்போதுமே மரியாதை இருந்தது இல்லை,” என்கிறார் நிகிஷா பட்டேல்.