இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்தப் படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்ததால் பிரபலமானார்.
இந்நிலையில், அவர் நடிக்க 'நோட்டா' என்ற படம் தமிழில் வெளி வந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் இந்தப் படம், எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதனால், அவரது ரசிகர்கள், விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் படத்துக்கான விமர்சனம் கலவையாக இருப்பதால், இது தொடர்பாக டுவிட்டர் மூலம் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அவர் தெரிவித்துள்ளதாவது:
'நோட்டா' படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவ்வளவு பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நோட்டாவில் முழுக்க மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். படத்தின் வெற்றி ஏமாற்றத்தை அளித்திருப்பதால், அதற்காக, நான் வருத்தப்படப் போவதில்லை. படம் தொடர்பாக வந்திருக்கும் அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். எல்லா விமர்சனங்களையும் பொறுமையாக பார்த்து, அடுத்தடுத்த படங்களில் சரி செய்வேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.