டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் எழுமின். விவேக், தேவயானி முதன்மை ரோலில் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விவேக் பேசியதாவது :
பெற்றோர்கள் குழந்தைகளை அருகில் இருந்து கவனிக்க வேண்டும். செய்தித்தாள் படித்தேன், ஒரு தாயே தன் மகளை தவறாக பயன்படுத்தியது அதிர்ச்சியாக இருந்தது. இன்றைக்கு சமூகவலைதளங்களில் வரும் விஷயங்கள் பிரச்னையாக இருக்கிறது. அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
பெண் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், தனிமையில் அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் யார், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் அவர்கள் என்ன மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளிடம் நண்பர்களாக மாற வேண்டும். அப்போது தான் அவர்கள் உங்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட மாட்டார்கள், தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றார்.