ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாடோடிகள் படத்திற்கு பிறகு சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சுந்தர பாண்டியன் தான். அவருக்கு மட்டுமல்ல அந்தபடத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனையும் நன்கு வெளிச்சம் போட்டு காட்டியது.. ஆனால் அதன் பின் எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்சனில் வெளியான இது கதிர்வேலன் காதல், சத்ரியன் இரண்டும் பெரிய அளவில் போகவில்லை.
இந்தநிலையில் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது மீண்டும் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்கிற படத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான டைட்டில் போஸ்டர் சமீபத்தில் சூர்யாவால் வெளியிடப்பட்டது. தற்போது இந்தப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஜுங்கா ரிலீசை தொடார்ந்து தமிழ், மலையாளம் எதிலும் படவாய்ப்புகள் இல்லாத மடோனா, கன்னடத்தில் கோட்டிகோபாலு-2 என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.