ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தை தழுவி எழுதிய ரண்டமூழம் நாவல், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான படமாக உருவாக இருப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. மோகன்லால் பீமனாக நடிக்கவுள்ள இந்தப்படத்தை பிரபல விளம்பரப்பப்பட்ட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ளார்.
இந்தநிலையில் ரண்டமூழம் படத்தின் கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், அந்தப்படத்தை இயக்கவுள்ள ஸ்ரீகுமார் மேனன், தனது ஸ்க்ரிப்ட்டின் உரிமையை தன்னிடம் திருப்பி தரவேண்டும் என கோழிக்கோடு முன்சீப் கோர்ட்டை அணுகியுள்ளார்.
“இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் தான் தீவிரமாக பணியாற்றி, இதன் மலையாள மற்றும் ஆங்கில வசனங்களையும் எழுதிக்கொடுத்து ஒப்பந்தம் போட்டபோது, இந்தக்கதையை மூன்று வருடங்களுக்குள் படமாக்க வேண்டும் என ஒரு நிபந்தனையையும் குறிப்பிட்டிருந்தாராம்.
ஆனால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு தற்போது நான்கு வருடம் ஆகிவிட்டதாம். மூன்று வருடம் முடிந்தும், அதன்பின் ஒரு வருடம் வரை காத்திருந்து பார்த்த எம்.டி.வாசுதேவன் நாயர், படப்பிடிப்பு துவங்கப்படும் அறிகுறி எதுவும் தென்படாததால் கோபமாகித் தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
ஆனால், இதில் சம்பந்தப்பட்ட அதே இயக்குனர் தான் தற்போது மோகன்லாலை வைத்து 'ஒடியன்' என்கிற படத்தை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..