இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்குத் திரையுலகின் இளம் ஸ்டார் ஆன விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான படம் 'நோட்டா'. இப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கடந்த வாரம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் தெலுங்கு ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை.
விஜய் தேவரகொண்டாவை ஒரு காதல் நாயகனாகவே பார்த்துப் பழகியவர்கள் அவரை முதல்வர் கதாபாத்திரத்தில் அதிகம் ரசிக்கவில்லை. படத்தில் காதல் காட்சியே இல்லை என்பதும் ஒரு காரணமாக அமைந்தது. மேலும், விஜய்யை ஆக்சன் ஹீரோவாகப் பார்ப்பதில் மற்ற முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் ரசிகர்களும் விரும்பவில்லை. அதனால், அவர்களும் படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இருப்பினும் படம் முதல் நாளிலும், முதல் வார இறுதியிலும் எதிர்பார்த்தது போலவே நல்ல வசூலைக் கொடுத்துள்ளது. முதல் வார இறுதியில் மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. படத்தின் தியேட்டர் உரிமை 25 கோடி என்பதால் இப்படம் நஷ்டத்திலிருந்து தப்பித்துவிடும் என்கிறார்கள். இன்னும் சாட்டிலைட் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவையும் உள்ளதால் தயாரிப்பாளருக்கு இந்தப் படம் லாபத்தைக் கொடுத்துவிடும்.
ஒரு சில ஏரியாக்களில் மட்டும் கொஞ்சமாக நஷ்டம் வரலாம் என்கிறார்கள். படத்தில் இன்னும் அதிகமான அரசியல் வசனங்களையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் இயக்குனர் அமைத்திருந்தால் இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என கோலிவுட்டில் பலரது விமர்சனமாக உள்ளது.