கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தெலுங்குத் திரையுலகின் இளம் ஸ்டார் ஆன விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான படம் 'நோட்டா'. இப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கடந்த வாரம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் தெலுங்கு ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை.
விஜய் தேவரகொண்டாவை ஒரு காதல் நாயகனாகவே பார்த்துப் பழகியவர்கள் அவரை முதல்வர் கதாபாத்திரத்தில் அதிகம் ரசிக்கவில்லை. படத்தில் காதல் காட்சியே இல்லை என்பதும் ஒரு காரணமாக அமைந்தது. மேலும், விஜய்யை ஆக்சன் ஹீரோவாகப் பார்ப்பதில் மற்ற முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் ரசிகர்களும் விரும்பவில்லை. அதனால், அவர்களும் படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இருப்பினும் படம் முதல் நாளிலும், முதல் வார இறுதியிலும் எதிர்பார்த்தது போலவே நல்ல வசூலைக் கொடுத்துள்ளது. முதல் வார இறுதியில் மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. படத்தின் தியேட்டர் உரிமை 25 கோடி என்பதால் இப்படம் நஷ்டத்திலிருந்து தப்பித்துவிடும் என்கிறார்கள். இன்னும் சாட்டிலைட் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவையும் உள்ளதால் தயாரிப்பாளருக்கு இந்தப் படம் லாபத்தைக் கொடுத்துவிடும்.
ஒரு சில ஏரியாக்களில் மட்டும் கொஞ்சமாக நஷ்டம் வரலாம் என்கிறார்கள். படத்தில் இன்னும் அதிகமான அரசியல் வசனங்களையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் இயக்குனர் அமைத்திருந்தால் இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என கோலிவுட்டில் பலரது விமர்சனமாக உள்ளது.