ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ். இவர் அறிமுமானது சிருங்காரம் என்ற தமிழ் படத்தில், அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்தார். காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது நடிகைகள் பாலியல் அத்துமீறல்களை தைரியமாக வெளியில் சொல்லிக் கொண்டிருக்கும் நேரம். அதிதியும் தன் பங்கிற்கு பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
புதிதாக சினிமா துறைக்கு வந்து கொள்கையுடன் செயல்படுவது கஷ்டம், ஆனால் முடியாத காரியம் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம். நான் நடிக்க வந்த புதிதில் ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. படுக்கைக்கு வந்தால்தான் பட வாய்ப்பு என்கிற நிலை எனக்கு 3 படங்களில் ஏற்பட்டது. அதற்கு மறுத்து அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். எனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். அதனால் பட வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை.
சினிமா துறை பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என்று பொதுவாக கூற முடியாது. சினிமா துறை மட்டும் அல்ல பிற துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். சிலர் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்வார்கள். ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்கள் முன்னேறுவது கடினம். என்கிறார் அதிதிராவ்.