அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளன. இந்த வருட தீபாவளிக்கு “சர்கார், திமிரு புடிச்சவன், எனை நோக்கி பாயும் தோட்டா, பில்லா பாண்டி” ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'மெர்சல்' படம் அரசியல் வட்டாரங்களில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி அந்த பரபரப்பிலேயே வெற்றி பெற்றது. இப்போது தயாராகியுள்ள 'சர்கார்' படம் அரசியல் படம் என்று படக்குழுவினரே அறிவித்துவிட்டார்கள். அதனால், 'சர்சகார்' ஏதாவதொரு சர்ச்சையை உருவாக்கி அதில் ஓடிவிடவும் வாய்ப்புகள் அதிகம்.
அதே சமயம், 'சர்கார்' படத்துக்குப் போட்டியாக தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படமும், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள 'திமிரு புடிச்சவன்' படமும், ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி நடித்துள்ள 'பில்லா பாண்டி' படமும் வெளியாக உள்ளன. இதில் தனுஷ் படம் மட்டுமே இன்னும் தீபாவளிக்கு வருவதில் உறுதி செய்யப்படவில்லை. மற்ற படங்கள் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டன.
'சர்கார்' படத்தின் வெளியீட்டில் ஏதாவது கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் மட்டுமே மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்கும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1000 தியேட்டர்களில் 800 தியேட்டர்களை 'சர்கார்' படமே ஆக்கிரமித்துக் கொள்ளும் என்கிறார்கள்.