இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
தெலுங்கிலும் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் 'சர்கார்' படத்தைத் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். சர்கார் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், தெலுங்கு பதிப்புக்கான பாடல்களை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், 'சர்கார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 65 கோடிக்கு வாங்கயுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், அதை ஏரியாவாரியாக பிரித்து விற்கும் பணியை செய்து வருகிறது.
அதன்படி, சென்னை நகரத்தின் வெளியீட்டு உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். 7 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி', 'மெர்சல்' படங்களை சென்னை நகரத்தில் வெளியிட்டு மிகப்பெரிய லாபம் பார்த்தவர் அபிராமி ராமநாதன் என்பது கூடுதல் தகவல்.