ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
தெலுங்கிலும் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் 'சர்கார்' படத்தைத் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். சர்கார் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், தெலுங்கு பதிப்புக்கான பாடல்களை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், 'சர்கார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 65 கோடிக்கு வாங்கயுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், அதை ஏரியாவாரியாக பிரித்து விற்கும் பணியை செய்து வருகிறது.
அதன்படி, சென்னை நகரத்தின் வெளியீட்டு உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். 7 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி', 'மெர்சல்' படங்களை சென்னை நகரத்தில் வெளியிட்டு மிகப்பெரிய லாபம் பார்த்தவர் அபிராமி ராமநாதன் என்பது கூடுதல் தகவல்.