விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
தெலுங்கிலும் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் 'சர்கார்' படத்தைத் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். சர்கார் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், தெலுங்கு பதிப்புக்கான பாடல்களை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், 'சர்கார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 65 கோடிக்கு வாங்கயுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், அதை ஏரியாவாரியாக பிரித்து விற்கும் பணியை செய்து வருகிறது.
அதன்படி, சென்னை நகரத்தின் வெளியீட்டு உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். 7 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி', 'மெர்சல்' படங்களை சென்னை நகரத்தில் வெளியிட்டு மிகப்பெரிய லாபம் பார்த்தவர் அபிராமி ராமநாதன் என்பது கூடுதல் தகவல்.