துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
கோவா தேசிய திரைப்பட விழா, கெய்ரோ உலக திரைப்பட விழா உள்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வந்த மனுசங்கடா திரைப்படம், வருகிற 12ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. இதனை அம்ஷன்குமார் இயக்கி உள்ளார். ராஜீவ் ஆனந்த், மணிமேகலை, சசிகுமார், ஷீலா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
"பரியேறும் பெருமாள் போன்று இதுவும் சாதிக்கு எதிரான படம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம். இதில் கூடுதலாக தீண்டாமை குறித்து பேசப்படுகிறது. கோவாவில் நடந்த உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ் படம் இதுதான். நல்ல கதையசம்சமுள்ள படங்களை மக்கள் வரவேற்று ஆதரவளித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இந்தப் படத்திற்கும் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்" என்கிறார் இயக்குனர் அம்ஷன் குமார்.