தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் நடிகர் மன்சூரலிகான். சமீபகாலமாக அரசியல் தொடர்பான விவகாரமான கருத்துக்களை சொல்லி சர்ச்சைகளில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்று வருகிறார். இந்நிலையில், தற்போது மன்சூரலிகானின் மூன்றாவது மனைவியான வஹிதா என்பவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், மன்சூரலிகானின் இரண்டாவது மனைவி ஹமீதாவின் 22 வயது மகள் லைலா அலிகான், 15 வயது மகன் மீரான் அலிகான், இருவரும் இணைந்து மன்சூரலிகானின் மூன்றாவது மனைவியான வஹிதா என்ற என்னை இரும்புக் கம்பியால் தாக்கினார்கள். அந்த தாக்குதல் நடந்தபோது மன்சூரலிகானும், ஹமீதாவும் அருகில் இருந்தும் தடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்சூரலிகானின் இரண்டாவது மனைவி ஹமீதாவாவின் வாரிசுகளால் தாக்கப்பட்ட மூன்றாவது மனைவி வஹிதா, தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.