தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
தனது மனதுக்கு சரியென தோன்றிவிட்டால் எந்த கேரக்டரையும் ஏற்று நடிக்க தயங்காதவர் நடிகை பார்வதி. அந்தவகையில் ஆசிட் வீச்சால் பாதிப்புக்கு ஆளான ஒரு பெண்ணாக, புதிய படமொன்றில் நடிக்கிறார் பார்வதி. அறிமுக இயக்குனர் மனு அசோக் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஆசிப் அலி மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
பாலிவுட்டில் தீபிகா படுகோன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கிறாரே அதே கதைதான் இதுவா என்றால் இல்லையென மறுத்துள்ளார்கள் படத்தின் கதாசிரியர்கள் பாபி - சஞ்சய் இருவரும். இது உண்மைக்கதையல்ல என்றும், முற்றிலும் தங்கள் கற்பனையில் உதித்த கதை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப்படத்தில் பார்வதிக்கு மேக்கப் போடுவதற்காக பெங்களூரை சேர்ந்த பிரபல மேக்கப் கலை நிபுணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். வரும் நவ-1௦ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்