டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் நிறைய ரசிகர்களை கொண்டுள்ளவர் இளம் நடிகர் நிவின்பாலி. ஒரு பரீட்சார்த்த முயற்சியாக 'ரிச்சி' என்கிற நேரடி தமிழ்ப்படத்தில் நடித்தார். ஆனால் அவ்வளவாக அது வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் தற்போது அவர் நடித்துவரும் மூத்தோன் படம் ஒரே நேரத்தில் மலையாளத்திலும், இந்தியிலும் தயாராகி வருகிறது.
இதுபற்றி நிவின்பாலி கூறுகையில், “நடிகர்கள் தங்களுக்கான எல்லை கோட்டை தாண்டி சவால்களை சந்திக்க வேண்டும். தங்களுக்கு சரளமாக தெரியாவிட்டாலும் கூட மற்ற மொழிப்படங்களில் நடிக்க வேண்டும். ஒருவர் நடிகராக இருக்கிறார் என்பதே அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளம். அதனால் தனது திறமையை ஒரு குறிப்பிடட்ட மொழியுடன் நிறுத்திக்கொள்ள கூடாது” என கூறியுள்ளார்.