தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை வழக்கில் சிக்கி கைதான நடிகர் திலீப்பை, மீண்டும் சங்கத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து சில நடிகைகள் சங்கத்தில் இருந்து விலகினார்கள். சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த பார்வதி, ரேவதி, பத்மப்ரியா உள்ளிட்டவர்கள், திலீப் விஷயத்தில் நடிகர் சங்கம் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நடிகர் சங்க நிர்வாக குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில் பெண்கள் நல அமைப்பினர் வைக்கும் கோரிக்கைகள் குறித்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என மோகன்லால் உறுதியளித்தார். ஆனால், கடந்த சனிக்கிழமை கூட்டப்பட்ட நிர்வாக குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மோகன்லால், சங்க தலைவருக்கு யாரையும் நீக்கும் அதிகாரம் கிடையாது என்றும் பொதுக்குழுவுக்கு மட்டுமே இதற்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவை மாற்றும் அதிகாரம் உள்ளது” என்றும் உறுதியாக கூறியுள்ளார்.
இது பெண்கள் நல அமைப்பில் உள்ள நடிகைகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக குழுவுக்கு கூட அந்த அதிகாரம் இருக்கிறது என்றும் அதை வைத்து திலீப் விவகாரத்தில் அவர்களால் முடிவெடுக்கலாம்.. ஆனால் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்கள்” என பொறுமுகின்றனர்.
இந்த விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய இரண்டு தரப்புமே சட்டரீதியான ஆலோசகர்களை அணுகியுள்ளார்களாம்.