ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையில், ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. இப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகளை ரஹ்மான் லண்டனில் முடித்துவிட்டார்.
கடந்த ஒரு மாத காலமாகவே அங்கு பின்னணி இசைப் பதிவு வேலைகள் நடைபெற்று வந்தது. பல வெளிநாட்டு இசைக் கலைஞர்களுடன் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தப் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
'2.0' படத்தின் 2 பாடல்கள் மட்டும் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. இன்னும் ஒரு பாடலை வெளியிடவில்லை. படத்தின் டீசரை கடந்த மாதம் வெளியிட்டார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட டீசருக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது.
நவம்பர் 29ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் படத்தின் டிரைலரையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அநேகமாக தீபாவளியை முன்னிட்டு டிரைலர் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்தில் இந்தியத் திரையுலகத்தில் மிகப் பெரும் படமாக '2.0' படம் இருக்கும்.