இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவின் டாப் 10 படங்களில் ஒன்று உதிரிப்பூக்கள். இந்தப் படத்தில் நடித்தவர் கன்னடத்தை சேர்ந்த அஸ்வினி. அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். ஒரு சில கன்னடப் படங்களில் நடித்தவர், கன்னட இயக்குனர் டி.எஸ்.ரங்காவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது பெங்களூரில் மகள் வீட்டில் பேரன் பேத்திகளுடன் வசித்து வருகிறார்.
அண்மையில் சென்னை வந்த அஸ்வினி. தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும், தனது குருவுமான மகேந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் கூறும்போது "சென்னைக்கு ஒரு வேலைகயாக வந்தேன். மகேந்திரன் சாரை பார்க்க வேண்டும்போல இருந்தது. என்னை குருவாக இருந்து நல்ல நடிகையாக மாற்றியவர் அவர். குடும்பத்திற்காக நடிப்பில் இருந்து விலகினேன். நல்ல கதைகள் வந்தால் மீண்டும் நடிப்பது பற்றிய யோசிப்பேன்" என்றார்.