'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
தமிழ்த் திரையுலகத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார் சிம்பு. இந்தப் படத்தில் அவர் நேரம் தவறாமல் வந்து நடித்துக் கொடுத்த விதம் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது சுந்தர் .சி இயக்கத்தில் 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்க உள்ளார்.
'செக்கச் சிவந்த வானம்' படம் தெலுங்கில் 'நவாப்' என்ற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை சிம்பு வெளியிட்டுள்ளார். அதில், “நவாப்' படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது. உங்கள் ஆதரவு எனக்குக் கிடைத்துள்ளது. என்னுடைய நடிப்பை வரவேற்ற அனைவருக்கும் நன்றி. 'நவாப்' படத்திற்காக படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களில் படம் வெற்றி பெற்றுள்ளது. எனக்கு நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்க ஆசை. விரைவில் ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பேன்,” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு நடித்து தமிழில் வெளிவந்து தெலுங்கில் டப்பிங் ஆன 'மன்மதா, வல்லபா, சரடுடு' ஆகிய படங்கள் அவருக்கு அங்கு புகழைத் தேடித் தந்தன.