இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை சினிமா பிரபலங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.. ஒன்று நடிகை ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கியவர்கள்.. இன்னொன்று அந்த பட்டியலில் சிக்காதவர்கள்.. அந்த அளவுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார் ஸ்ரீரெட்டி.
சில தினங்களுக்கு முன் தெலுங்கு சீனியர் நடிகரான ராஜேந்திர பிரசாத்தை தனது முகநூல் பக்கத்தில் வறுத்தெடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. குறிப்பாக ராஜேந்திர பிரசாத் ஒரு மன நோயாளி என்றும் அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.
மேலும், நடிகை மாளவிகா சினிமாவை விட்டு ஒதுங்கும் அளவுக்கு ராஜந்திர பிரசாத் டார்ச்சர் செய்தாரென்றும், நடிகைகளுக்கு எந்த அளவுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும், நடிகை ஹேமா அவருடன் ஏன் சண்டையிட்டாரென்றும், அவ்வளவு ஏன் அவருடைய மகள் அவரை விட்டு ஏன் ஓடிப்போனார் என்றும் ஊருக்கே தெரியும் என விளாசியுள்ளார் ஸ்ரீரெட்டி. உங்களை சீனியர் நடிகர் என்கிற வகையில் மதிக்கிறேன் என்றும் ஆனால் ஒரு மனிதனாக அல்ல என்றும் அதில் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.